அந்த நாளை ஆவலுடன் எதிர்நோக்கி
வாஞ்சையோடு கைகுலுக்கி
மிதமாய்க் கட்டியணைத்து
குடும்பத்தினரை அறிமுகப்படுத்தி
கவலையற்ற
கல்விக் கால நினைவுகளை அளவளாவி
ஆடல் பாடலோடு
விருந்துண்டு மகிழும்
ஆண்டுகள் கடந்த
சந்திப்பின் நிகழ்வினில்
எந்த ஆணுக்கும் தோன்றுவதில்லை
மனைவிக்கும்
தோழமை உண்டென்ற உணர்வுகள் .
பின்னூட்டமொன்றை இடுக